Pages
▼
Friday, January 30, 2015
Thursday, January 22, 2015
Sunday, January 18, 2015
Saturday, January 17, 2015
எங்க வீட்டு பொங்கல் !!!
பொங்கல் ஞாபகங்கள் :
சிறு வயதிலிருந்தே பொங்கல் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
ஊர் முழுதும் தோரணம், தெருவெங்கும் விழா மேடைகள்!
ஆடல் பாடல் போட்டி, கபடி, வழுக்கு மரமேறுதல் , உறியடித்தல்
போன்ற சுவாரஸ்யமான போட்டிகள் என்று ஊரே கலகலப்பாக இருக்கும்.
விழாக் குழு நண்பர்களின் "பேரிரைச்சல்" ஒலிபெருக்கியின் தயவால்
தொலைகாட்சியில் எந்த நிகழ்சிகளையும் பார்க்க முடியாது .
ஒரு வாரம் பள்ளி விடுமுறையாதலால் காலையிலிருந்து இரவு வரை
பொங்கல் விழா மேடையருகே தான் எங்கள் விளையாட்டுக் களம்.
பாரபட்சமில்லாமல் எல்லா போட்டிகளிலும் கலந்து (?!) கொண்டு , பரிசுகள்
வாங்க தூங்காமல் நடு இரவு வரை விழித்திருத்தல்,
வாடகைக்கு வாங்கி வந்த ஒலி /ஒளி பெட்டிகள் வைத்து , திரை கட்டி
எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களை விடிய விடிய பார்ப்பது.
பொங்கலைப்பற்றி நினைத்தாலே , நெஞ்சம் இனித்திருக்க எத்தனையோ
ஞாபகங்கள் இது போல பல இருக்கும் ..
ஆனால் இப்போதெல்லாம் ? :(
ஹும் மீண்டு (மீண்டும் ) வராதா அந்த அழகிய பொங்கல் விழாக் காலம் ?
எங்க வீட்டுப் பொங்கல் :

சிறு வயதிலிருந்தே பொங்கல் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
ஊர் முழுதும் தோரணம், தெருவெங்கும் விழா மேடைகள்!
ஆடல் பாடல் போட்டி, கபடி, வழுக்கு மரமேறுதல் , உறியடித்தல்
போன்ற சுவாரஸ்யமான போட்டிகள் என்று ஊரே கலகலப்பாக இருக்கும்.
விழாக் குழு நண்பர்களின் "பேரிரைச்சல்" ஒலிபெருக்கியின் தயவால்
தொலைகாட்சியில் எந்த நிகழ்சிகளையும் பார்க்க முடியாது .
ஒரு வாரம் பள்ளி விடுமுறையாதலால் காலையிலிருந்து இரவு வரை
பொங்கல் விழா மேடையருகே தான் எங்கள் விளையாட்டுக் களம்.
பாரபட்சமில்லாமல் எல்லா போட்டிகளிலும் கலந்து (?!) கொண்டு , பரிசுகள்
வாங்க தூங்காமல் நடு இரவு வரை விழித்திருத்தல்,
வாடகைக்கு வாங்கி வந்த ஒலி /ஒளி பெட்டிகள் வைத்து , திரை கட்டி
எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களை விடிய விடிய பார்ப்பது.
பொங்கலைப்பற்றி நினைத்தாலே , நெஞ்சம் இனித்திருக்க எத்தனையோ
ஞாபகங்கள் இது போல பல இருக்கும் ..
ஆனால் இப்போதெல்லாம் ? :(
ஹும் மீண்டு (மீண்டும் ) வராதா அந்த அழகிய பொங்கல் விழாக் காலம் ?
எங்க வீட்டுப் பொங்கல் :

Thursday, January 15, 2015
இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் !!
தைத் திங்கள் நன்னாளில்,
உழவுக்கும், உழவர்க்கும்
எனது முதல் வணக்கம்
தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தை மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடவேண்டிய விவசாயிகள் ..
விவசாயிகளை கொண்டாடவேண்டிய தமிழர்கள் அனைவருக்கும் ,
உழவினையும் உழவரையும் கைவிட்டு ,
இன்று கார்பரேட் கம்பனிகளின் அடிமைகளாக / கைக் கூலிகளாக
வேலை பார்க்கும் தமிழ் இளைஞர்களின் சார்பாக
எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
Tuesday, January 13, 2015
தூய்மை இந்தியா !!!
சமுதாயத்தின் மேல் அக்கறைப்படும் / கோபப்படும் அத்துனை நல் உள்ளங்களுக்கும்....
தனி மனித ஒழுக்கமின்றி , சமுதாய சீர்திருத்தம் என்றுமே சாத்தியமாகாது .
அப்படி இல்லாவிடில் , உங்கள் கூக்குரல்கள் யாவும் "சாத்தானின் காதுகளில் ஓதப்படும் வேதங்களே ".
லட்சம் கோடி ஊழல்களும் , லஞ்ச லாவண்ய பொய்யும் புரட்டும்,
கடமையை செய்வதற்கே கையூட்டு பெரும் வெட்க கேடுகளும்,
பட்டினியால் பிணங்கள் ஆனவர்கள் மேல் அமர்ந்து பணம் பழுத்தவர்கள் 'பார்ட்டி' கொண்டாடுவதும்,
பெற்ற குழந்தைகளையே கொல்ல வைக்கும் பொருந்தா காமங்களும்,
'கௌரவ' கொலைகளும் ( இதில் என்ன கௌரவமோ ?!) ,
சாதீய அடக்குமுறைகளும் ..
என சமுதாயத்தின் அத்தனை அவலங்களுக்கும் தீர்வு ஒன்று தான் .. தனி மனித ஒழுக்கம்.
கடமையை செய்வதற்கே கையூட்டு பெரும் வெட்க கேடுகளும்,
பட்டினியால் பிணங்கள் ஆனவர்கள் மேல் அமர்ந்து பணம் பழுத்தவர்கள் 'பார்ட்டி' கொண்டாடுவதும்,
பெற்ற குழந்தைகளையே கொல்ல வைக்கும் பொருந்தா காமங்களும்,
'கௌரவ' கொலைகளும் ( இதில் என்ன கௌரவமோ ?!) ,
சாதீய அடக்குமுறைகளும் ..
என சமுதாயத்தின் அத்தனை அவலங்களுக்கும் தீர்வு ஒன்று தான் .. தனி மனித ஒழுக்கம்.
அவரவர் மனங்களை, இல்லங்களை சுத்தப்படுத்துவோம் ...
நாடும் சுத்தமாகும் ........