தீபஒளித் திருநாள் :
தீபங்களின் திருநாளாம் தீபாவளி, இந்துக்களின் முக்கியப் பண்டிகை, இது இந்தியாவில் மிக அதிகமாகவும் , பரவலாகவும் கொண்டாடப்படுகிறது .
வட இந்தியாவில் இதை வனவாசத்திலிருந்து ராமர் திரும்பிய நாளாக கொண்டாடுகிறார்கள் .
தென் இந்தியாவில், இதை நரகாசுரன் வதம் செய்யப்பட்ட நாளாக கொண்டாடுகிறார்கள் .
மலேசியாவில் இதனை "ஹரி திவாளி " என அழைக்கின்றனர்.
நேபாளத்தில் , தீபாவளி திஹார் (அ) ஸ்வண்டி என கொண்டாடப்படுகிறது . இன்று மரணத்தின் கடவுளான "யமனை" வழிபட்டால் நீண்ட ஆயுளை பெற முடியும் என நம்புகின்றனர்.
வங்காளத்தில் இது காளியின் பண்டிகையாக "காளி பூஜையாக" கொண்டாடப்படுகிறது.
ஒதிஷாவில் இந்நாளில் , இறந்தவர் ஆன்மாக்கள் சொர்க்கம் சேர வழிகாட்டும் விதமாக சணல் கீற்றுக்களை எரிப்பர்.
சீக்கியர்களுக்கு தீபாவளி ஒரு முக்கிய தினமாகும் . சீக்கியர்களின் புனித கோவிலான "பொற்கோவில்" கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது 1577 ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் தான்.
மகாவீரர் நிர்வாணம் (அ) மோட்சம் அடைந்தது தீபாவளி நாளில்தான் , அதனால் இந்தியாவிலுள்ள சமண மதத்தை சேர்ந்தவர்கள் இந்நாளை புத்தாண்டாக கொண்டாடுகிறார்கள் .
அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள் !!!
தீபங்களின் திருநாளாம் தீபாவளி, இந்துக்களின் முக்கியப் பண்டிகை, இது இந்தியாவில் மிக அதிகமாகவும் , பரவலாகவும் கொண்டாடப்படுகிறது .
வட இந்தியாவில் இதை வனவாசத்திலிருந்து ராமர் திரும்பிய நாளாக கொண்டாடுகிறார்கள் .
தென் இந்தியாவில், இதை நரகாசுரன் வதம் செய்யப்பட்ட நாளாக கொண்டாடுகிறார்கள் .
மலேசியாவில் இதனை "ஹரி திவாளி " என அழைக்கின்றனர்.
நேபாளத்தில் , தீபாவளி திஹார் (அ) ஸ்வண்டி என கொண்டாடப்படுகிறது . இன்று மரணத்தின் கடவுளான "யமனை" வழிபட்டால் நீண்ட ஆயுளை பெற முடியும் என நம்புகின்றனர்.
வங்காளத்தில் இது காளியின் பண்டிகையாக "காளி பூஜையாக" கொண்டாடப்படுகிறது.
ஒதிஷாவில் இந்நாளில் , இறந்தவர் ஆன்மாக்கள் சொர்க்கம் சேர வழிகாட்டும் விதமாக சணல் கீற்றுக்களை எரிப்பர்.
சீக்கியர்களுக்கு தீபாவளி ஒரு முக்கிய தினமாகும் . சீக்கியர்களின் புனித கோவிலான "பொற்கோவில்" கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது 1577 ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் தான்.
மகாவீரர் நிர்வாணம் (அ) மோட்சம் அடைந்தது தீபாவளி நாளில்தான் , அதனால் இந்தியாவிலுள்ள சமண மதத்தை சேர்ந்தவர்கள் இந்நாளை புத்தாண்டாக கொண்டாடுகிறார்கள் .
அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள் !!!