Find us on Google+ இணையத் தமிழன்: நான் ஏன் பதிவு எழுத வேண்டும் - ஒரு தன்னிலை விளக்கம்

Pages

Creative Commons License
இணையத் தமிழன் by Vijay Periasamy is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.

Thursday, January 20, 2011

நான் ஏன் பதிவு எழுத வேண்டும் - ஒரு தன்னிலை விளக்கம்


பதிவுகள் எனக்கு அறிமுகமாகி 3 வருடங்கள் ஆகிவிட்டது , ஆனால்
உருப்படியாக நான் எதையுமே எழுதியதில்லை .


நான் ஏன் எழுதவேண்டும் என்று எனக்கே பல நேரங்களில் தோன்றுவதுண்டு , ஆனாலும் மனசுக்குள்ளே எழுதவேண்டும் என்ற உந்துதலும் , ஆர்வமும் எனக்கு எப்பவுமே இருந்துவருகின்றது . அந்த ஆர்வத்தால ( ஆர்வக்கோளாறு ? ) அப்பப்போ பதிவுகள் எழுதரதுண்டு .

சமீபத்தில் , அறை நண்பர் எனது   "வாழ்க நற்றமிழ் !!! வாழிய செந்தமிழ் நாடு !!! ", என்ற பதிவை படிச்சிட்டு , பத்திரிகையில வர்ற செய்தியெல்லாம் படிச்சிட்டு அதிலிருந்து வாக்கியங்களா எடுத்து போட்டு , பதிவா எழுதீட்டீங்களா ? என்று விளையாட்டாக கேட்டார். 

அந்த நிமிசமே மனசுக்குள்ள , நான் ஏன் பதிவு எழுத வந்தேன் என்ற கேள்விக்கு பதில் கிடைத்தது . யாரையும் impress பண்ணவோ , பிரபல பதிவர் ஆகவேண்டும் என்றோ நான் எழுதவில்லை .

என் மனசுக்குள் எழும் ஆதங்களுக்கும் , கேள்விகளுக்கும் வடிகாலாகவும் ..
சமுதாயத்தில் , அரசியலில் மக்களுக்கு எதிராக எதாவது தீங்கு நடக்கும் போது , அதை நேரடியா எதிர்க்க திராணி இல்லா விட்டாலும் , என்னோட எதிர்ப்பையும் , கருத்துகளையும் அழுத்தமா வெளிப்படுத்த , என்னுடைய பதிவுகள் என்னோட நிலைக்கண்ணாடியா இருக்கு .

அதுவுமில்லாம , பள்ளியில் படிக்கும் போது , தமிழ்ல்ல எழுதி பழகினது , அதற்க்கப்புறம் பல வருடங்களாக , என் தமிழுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லாதிருந்தது .
தமிழுக்கும் எனக்குமான தொடர்பாகவே , என் பதிவுகள் இருப்பதால் எனக்கு மிக்க மகிழ்ச்சியே ..

மற்றபடி , விமர்சனங்கள் அனைத்தும் வரவேற்க்கபடுகின்றன . எதிர்மறை கருத்துகளும் என்னை நெறிப்படுத்தவே உதவும் என்பதால் .....,

போற்றுவார் போற்றட்டும் , தூற்றுவார் தூற்றட்டும் !!!   

0 Comments
Tweets
Comments

Popular Posts