விகடன் படிக்கும் என்னை
என் விகடனில் அறிமுகப்படுத்திய
என் "விகடனுக்கு"
என் நெஞ்சார்ந்த நன்றி.
வெறும் பொழுதுபோக்குக்காக வலைப்பதிவு ஆரம்பித்த நான் ,நீண்ட இடைவெளிகளில்சொற்ப பதிவுகளையே எழுதியுள்ளேன் .வலையுலகில் சஞ்சரிக்க ஆரம்பித்த பின் தான் "நான் ஏன் பதிவு எழுத வேண்டும்" என்று தன்னிலை விளக்கத்தை கொடுத்துக்கொண்டு எழுத ஆரம்பித்தேன்.
வலைப்பூ வட்டத்தில் என் முதல் அங்கீகாரம் / அடையாளம் கொடுத்தது "வலைச்சரம்" . பதிவுலக நண்பர்களுக்கு வலைச்சரத்தை பற்றி ஏற்கனவே தெரிந்திருக்கும் . அதில் என்னுடைய "சிட்டு குருவிகள் , காணாமல் போன கதை !!!" பதிவை அறிமுகப்படுத்தி எனக்கு முதல் அங்கீகாரத்தை அளித்த வலைச்சர குழுவுக்கு என் நன்றி .
விகடன் எனக்கு எப்போதுமே நெருக்கமானது ."என் விகடன்" ல் வலையோசை பகுதி ஆரம்பித்ததிலிருந்தே நான் அதை தவறாமல் வாசித்து வருவேன் .ஒவ்வொரு வாரமும் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து வலைப்பதிவர்களுக்கும் ,சற்றே பொறாமை கலந்த வாழ்த்துக்களை தெரிவித்து வருவேன் .ஆனால் என் விகடனில் என் வலைப்பூவும் அறிமுகப்படுத்தப்படும் என்று நான் நினைக்கவே இல்லை .
விகடனின் இந்த அங்கீகாரம் எனக்கு மிகவும் பெரியது .நான் இன்னும் நன்றாக எழுத வேண்டும் , என்னை பாதிக்கும் என் சமூகத்தை பாதிக்கும் அனைத்து விஷயங்களையும் பதிவு செய்ய வேண்டும் என்ற ஊக்கத்தையும் உத்வேகத்தையும் விகடன் எனக்கு அளித்திருக்கிறது . என் வலைப்பூவையும் தேர்ந்தெடுத்த விகடன் நிருபர் "திரு.ஷக்தி" அவர்களுக்கும் , "என் விகடன்" ஆசிரியருக்கும்,என் பதிவை படித்து அதன் நிறை /குறை களை பகிர்ந்த அனைத்து நண்பர்களுக்கும் என் கோடானுகோடி நன்றி.