Find us on Google+ இணையத் தமிழன்: 2012

Pages

Creative Commons License
இணையத் தமிழன் by Vijay Periasamy is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.

Thursday, December 6, 2012

மாற்றங்கள் மலரட்டும்

இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்கிறேன் : 

மாற்றுத் திறனாளிகள் ஓட்டுவதற்கு வசதியாக கையால் இயக்கும் வகையில் காரை வடிவமைத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் கும்பகோணத்தை சேர்ந்த உதயகுமார் என்ற தன்னம்பிக்கை இளைஞர்.





இவரும் 3 வயதிலேயே இரண்டு கால்களும் போலியோவால் பாதிக்கப்பட்டவர்தான். ஆனாலும், தனது விடா முயற்சியால் இந்த சிறந்த தொழில்நுட்பத்தை கண்டறிந்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். பிரேக், கிளட்ச், ஆக்சிலேட்டர் ஆகிய அனைத்தயும் கால்களுக்கு பதிலாக கைகளால் இயக்கும் வகையில் வடிவமைத்துள்ளார்.

அத்தோடு, தன்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த காரை வடிவமைத்து கொடுக்கிறார். மாற்றுத் திறனாளிகள் நன்மையை கருதி சேவை மனப்பான்மையோடு கட்டணம் எதுவும் பெறாமல் செய்து தருகிறார்.

எரிகிற வீட்டில் பிடுங்குவது ஆதாயமாக கருதும் இந்த காலத்தில் உதிரிபாகங்களுக்கு செலவாகும் தொகையை தவிர கூடுதலாக தொகை எதுவும் பெறுவதில்லை என்கிறார். அனைவருக்கும் முன்மாதிரியாக இருந்து வியக்க வைக்கும் இந்த சாதனை இளைஞரை இதுவரை 15 கார் தயாரிப்பாளர்கள் தொடர்பு கொண்டு தொழில்நுட்பத்தை பேரம் பேசியுள்ளனர்.

ஆனால், தனது தொழில்நுட்பத்தை யாருக்கும் விற்கப் போவதில்லை என்று நம்மிடம் மன உறுதியுடன் தெரிவித்தார். ஆல்ட்டோ போன்ற கார்களுக்கு ரூ.58,000 வரையிலும், டொயோட்டா பார்ச்சூனர் உள்ளிட்ட கார்களுக்கு ரூ.85,000 வரையிலும் உதிரிபாகங்களுக்கு செலவாகும் என்றார். இதுதவிர, 10,000 கிமீ.,க்கு ஒரு முறை சர்வீஸ் செய்வதற்காக ரூ.5,000 கட்டணமாக சேர்த்து செலுத்தினால் வீட்டிற்கே வந்து சர்வீஸ் செய்து தருவதாக கூறுகிறார்.

                                 

இந்தியாவிலேயே முதல் முறையாக கையால் இயக்கும் கார் தொழில்நுட்பமாக இது பார்க்கப்படுகிறது. இவர் கண்டுபிடித்த தொழில்நுட்பத்தை ஐஐடி நிறுவனம் அங்கீகரித்துள்ளதோடு, ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளின் பிரபலமான கார் கம்பெனிகள் உதயகுமாரை அழைத்து அணுகியுள்ளனர். இதில், வேதனையான விஷயமே ஜெர்மன் நிறுவனங்களுக்கு தெரிந்த உதயகுமாரை, மத்திய அரசுக்கோ அல்லது மாநில அரசோ தெரியவும் இல்லை, கண்டுக்கொள்ளவும் இல்லை.

உங்கள் குடும்பத்தினர் மற்றும் நட்பு வட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு இதுபோன்று காரை வடிவமைத்து தர விரும்பினால் கீழ்க்கண்ட அலேபேசி எண்ணில் உதயகுமாரை தொடர்புகொள்ளலாம்.

உதயகுமாரின் அலைபேசி எண்: 9940734277

உதயக்குமார் போன்ற சேவை மனப்பான்மையுடன் கூடிய உண்மையான திறனாளிகளை வாழ்த்துவோம்

தோல்வியடைய 10 வழிகள் :


நாணயம் விகடன் இதழிலிருந்து ..


'பிஸினஸில் தோல்வியைச் சந்திக்க பத்து விதிகள்’ 
கோகோ-கோலா கம்பெனியின் முன்னாள் தலைவர் டொனால்ட் ஆர் கியோக் எழுதிய புத்தகம்.இவற்றை பின்தொடர்ந்தால் தோல்வி நிச்சயம் என்று திட்டவட்டமாகச் சொல்கிறார் டொனால்ட்.


1. ரிஸ்க் எடுப்பதை நிறுத்திவிடுங்கள்.

2. மாற்றங்கள் எதையும் செய்யாமல் பிடிவாதமான குணத்துடன் இருங்கள்.

3. மேனேஜரோ/சிஇஓ-வோ உங்கள் நிறுவனத்தில் இருப்பவர்கள் யாரிடமும் பேசாமல், பழகாமல் தனிமையில் வாழுங்கள்.

4. நான் தவறே செய்ய மாட்டேன் என்ற இறுமாப்புடன் இருங்கள்.

5. தவறாகப் போய்விடும் வாய்ப்பிருக்கும் ரேஞ்சிலேயே உங்கள் தொழிலை எப்போதும் நடத்திச் செல்லுங்கள்.
                                        
                                         

6. எதையும் யோசித்து செய்யாதீர்கள்.

7. வெளியாட்களின் சிறப்பறிவை (எக்ஸ்பர்ட்டைஸ்) மட்டுமே முழுமையாக நம்பியிருங்கள்.

8. உங்களை அதிகாரக் குவியலின் மையமாக்கிக் கொண்டு என்னைக் கேட்டுத்தான் எல்லாம் நடக்க வேண்டும் என்று சொல்லுங்கள். உங்கள் அதிகாரத்தை ரசித்து அனுபவியுங்கள்.

9. வரும், ஆனா வராது; கிடைக்கும், ஆனா கிடைக்காது போன்ற குழப்பமான தகவல்களையே உங்களின் கீழ் இருப்பவர்களுக்கு அனுப்புங்கள்.

10. எதிர்காலத்தை நினைத்து எப்போதுமே பயத்துடன் செயல் படுங்கள்.

பொன் போன்ற இந்த விதிகளை ஞாபகம் வைத்து , இவற்றை தவிர்த்து வாழ்விலும்,தொழிலிலும் வெற்றியடைய வாழ்த்துக்கள் .

Monday, November 12, 2012

தீப ஒளித் திருநாள்

தீபஒளித் திருநாள் :

தீபங்களின் திருநாளாம் தீபாவளி, இந்துக்களின் முக்கியப் பண்டிகை, இது இந்தியாவில் மிக அதிகமாகவும் , பரவலாகவும் கொண்டாடப்படுகிறது .

வட இந்தியாவில் இதை வனவாசத்திலிருந்து ராமர் திரும்பிய நாளாக கொண்டாடுகிறார்கள் .

தென் இந்தியாவில், இதை நரகாசுரன் வதம் செய்யப்பட்ட நாளாக கொண்டாடுகிறார்கள் .

மலேசியாவில் இதனை "ஹரி திவாளி " என அழைக்கின்றனர்.

நேபாளத்தில் , தீபாவளி திஹார் (அ) ஸ்வண்டி என கொண்டாடப்படுகிறது . இன்று மரணத்தின் கடவுளான "யமனை" வழிபட்டால் நீண்ட ஆயுளை பெற முடியும் என நம்புகின்றனர்.

வங்காளத்தில் இது காளியின் பண்டிகையாக "காளி பூஜையாக" கொண்டாடப்படுகிறது.

ஒதிஷாவில் இந்நாளில் , இறந்தவர் ஆன்மாக்கள் சொர்க்கம் சேர வழிகாட்டும் விதமாக சணல் கீற்றுக்களை எரிப்பர்.

சீக்கியர்களுக்கு தீபாவளி ஒரு முக்கிய தினமாகும் . சீக்கியர்களின் புனித கோவிலான "பொற்கோவில்" கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது 1577 ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் தான்.

மகாவீரர் நிர்வாணம் (அ)  மோட்சம் அடைந்தது தீபாவளி நாளில்தான் , அதனால் இந்தியாவிலுள்ள சமண மதத்தை சேர்ந்தவர்கள் இந்நாளை புத்தாண்டாக கொண்டாடுகிறார்கள் .


அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள் !!!




   

Saturday, November 10, 2012

பசுமை 500 - அசத்தும் இந்திய நிறுவனங்கள்


நியூஸ் வீக்:

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திலிருந்து வெளிவரும் சர்வதேச வார இதழ் நியூஸ் வீக் . கடந்த 2010 ஆம் ஆண்டு "தி டெய்லி பீஸ்ட்" என்னும் இணைய இதழுடன் இணைந்தது. வரும் டிசம்பர் 2012 முதல் தன்னுடைய அச்சுப் பதிப்பை நிறுத்திக்கொள்ளப்போகும்  நியூஸ் வீக் இதழ் இனி இணைய இதழாக மட்டுமே வெளிவரும் .

பசுமை நிறுவனங்கள் தரவரிசை :

நியூஸ் வீக் சஞ்சிகை , நியூஸ் வீக் பசுமை தரவரிசை" என்னும் பெயரில் அமெரிக்காவிலும் , உலக அளவிலும் , சுற்றுப்புற சூழலை பேணிக்காக்கும் சிறந்த 500 நிறுவனங்களின் தரவரிசையை  வெளியிடுகின்றது.

2012 பசுமை தரவரிசை:
இந்த ஆண்டு வெளியிட்ட தர வரிசையில் , உலக அளவில், 2 ஆம் இடம் பெற்றுள்ளது  இந்தியாவின் விப்ரோ நிறுவனம்.  அது மட்டும் அல்ல முதல் 20 இடங்களில் இந்தியாவின் 3 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் , இடம்பெற்று அசத்தியுள்ளது . 11 ஆம் இடத்தில டாடா கன்சல்டன்சி சர்வீ சஸ் -ம் , 19 ஆம் இடத்தை இன்போசிஸ் நிறுவனமும் பெற்றுள்ளது .

இவை தவிர மேலும் 10 இந்திய நிறுவனங்கள் இந்த தரவரிசையில் இடம்பெற்றுள்ளது . அவை ...

நிறுவனம்                                                       தரவரிசை                                                          
லார்சென் & டூப்ரோ                                         96
டாட்டா மோட்டர்ஸ்                                       282
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்                      342
பாரத ஸ்டேட் வங்கி                                       344
ஹச்.டி.எப்.சி  வங்கி                                        346
ஓ.என் .ஜி.சி                                                     386
டாட்டா ஸ்டீல்                                                  419
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி                                              476
என்.டி.பி.சி                                                        497
கோல் இந்தியா                                                  499


நியூஸ் வீக் பசுமை தரவரிசை பட்டியலை இங்கே முழுமையாக காணலாம் :

எண்ணிக்கை அளவில்  குறைவாக இருந்தாலும் , முதல் 20 இடங்களில் 3 இந்திய நிறுவனங்கள் இடம்பெற்று இருப்பது சாதனை தானே ?! அதிலும் இந்த நிறுவனங்கள் தங்கள் துறை சார்ந்த தொழில்களில் ஈடுபடுவதோடு  சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பிலும் ஈடுபடுவது கூடுதல் சிறப்பு . எனவே இதை மனமார பாராட்டுவோம் .

பசுமையை காப்பதில் அனைவரும் பங்கெடுப்போம் .


Monday, November 5, 2012

காணாமல் போன பேனாக்கள்


எழுத்தின் வீரியத்தை விவரிக்க , கீழ்க்கண்ட சொல்லாடல் ஒரு உதாரணம் ...

"கத்தி முனையை விட பேனா முனை கூர்மையானது"

என் சிறு வயதில் பேனா பிடித்து எழுதுவதும் எனக்கு பெரிய சாதனை தான் .
மழலை வகுப்புகளில் , பென்சிலை மட்டுமே கையாள முடியும் .
பேனாக்கள் எல்லாம் பெரிய வகுப்பிற்கு சென்றால் மட்டுமே உபயோகப்படுத்த முடியும் .






நடுநிலை வகுப்புகளில் , நீலம் அல்லது கருப்பு மை ஊற்றி எழுதும் குண்டு பேனா அறிமுகம் . கைக்கும் சரியாக அடங்காமல் , கையெழுத்தும் சரியாக அமையாமல் , கையிலும் சட்டையிலும் மை அப்பிக்கொண்டு ... அப்பொழுதெல்லாம் "HERO" பேனாவின் மீது மையல் .

                       

ஆனால் ஹீரோ பேனாக்களோ , பெரிய வகுப்புகளுக்கு சென்றால் மட்டுமே , பெற்றோர்கள் வாங்கித் தருவார்கள் . எனவே எப்போது பத்தாம் , பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு வருவோம் , பெரிய அண்ணாக்களைப்  போல  
ஹீரோ பேனாக்களை பயன்படுத்துவோம் என்ற ஆசை உண்டு .

                     

பள்ளி இறுதியில் படிக்கும் போதோ , கல்லூரி கனவுகள் வந்து தாலாட்டும் , எப்போது கல்லூரிக்கு செல்வோம் , ஒற்றை நோட்டு புத்தகத்தை முதுகில் சொருகிக்  கொண்டு , ஸ்டைல் ஆக விதவிதமான Ball Point பேனாக்களை உபயோகப்படுத்த முடியும் , என்று ஏக்கம் வருவதுண்டு .


                       

பின்னர் கல்லூரியில் பலவித பேனாக்களை பயன்படுத்திய போதும் ,  அதை அனுபவித்து பார்க்க நேரமோ மனமோ , இல்லாமல் போய் விட்டது .







படிப்பை முடித்து , வேலை கிடைத்து , சில வருடங்கள் கழித்து திரும்பிப் பார்க்கும் போது , எனக்கும் பேனாவுக்குமான இடைவெளி நீநீண்டிருந்தது















கடைசியாக எப்போது பேனாவை பயன்படுத்தினோம் என்ற நினைவே இல்லை . கடன் அட்டைகளுக்கு கையெழுத்து போடுவதை தவிர வேறெப்போதும் எனக்கு பேனா தேவைப்பட்டிருக்கவில்லை .
வலைப்பூ எழுதுவதற்கு கூட கணினியின் கீபோர்டே போதுமானதாகிவிட்டது .

                             


அனால் இப்போது பள்ளியில் படிக்கும் குழந்தைகளை பார்க்கும் போதும் , அவர்கள் பேனா பென்சில் ஆகியவற்றை பயன்படுத்தும் போதும் , எதையோ இழந்த ஏக்கம் வருவதை தவிர்க்க முடியவில்லை .

Sunday, October 28, 2012

WWW - வருங்காலத் தொழில்நுட்பம் - ஆனந்த விகடன் - 2012-10-24




'வருங்காலத் தொழில்நுட்பம்’ புத்தகத்தின் முதல் தொகுதியை அனுப்புவதாக உறுதியளித்த அண்டன் பிரகாஷ் அவர்களுக்கு நன்றி !

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்
ரண்டு வாரங்களுக்கு முன்னால், கூகுள் மேப் சேவையின் மகத்துவங்களைச் சொன்ன கட்டுரையில், சீனாவில் இருந்து ஜப்பானுக்குச் செல்லும் வழித்தடம்பற்றிய கேள்வி ஒன்றைக் கேட்டிருந்தேன். 'பசிபிக் பெருங்கடலில் ஜெட் ஸ்கீயில் (தண்ணீரில் செல்லும் ஸ்கூட்டர் போன்ற வாகனம்) 782 கிலோ மீட்டர்கள் செல்லுங்கள்’ என்று கூகுள் செய்யும் குறும்பை எத்தனை பேர் கண்டுபிடிக்கிறார்கள் என்பதைப் பார்ப்பது நோக்கம். கொடுக்கப்பட்ட ஸ்டெப் தவறாக இருந்தாலும், அதைக் கண்டுபிடித்தவர்கள் பலர். அச்சிலோ, ஆன்லைனிலோ சுடச்சுட வெளியானதும் ட்வீட்டிய கண்ணன் (@Kannan Msundaram ), 10-வது நபரான விஜய் பெரியசாமி (@vijay twitts)), 10-வது இடத்தை மயிரிழையில் தவறவிட் டாலும், 'நான்தானே அந்த பத்தாவது ஆள்’ என தொடர்ந்து ட்விட்டரித்த ஸ்ரீஹர்ஷ னுக்கும் (@sri_harshan) 'வருங்காலத் தொழில்நுட்பம்’ புத்தகத்தின் முதல் தொகுதியை அனுப்பி வைக்கிறேன் என அந்த ட்வீட் குருவியின் சாட்சியாக உறுதியளிக்கிறேன்.
 சென்ற வாரத்தில், கடைகளில் பொருட்களைக் கொண்டுவந்து விற்கும் brick & mortar நிறுவனம் ஒன்று அமேசான் போன்ற ஆன்லைன் வணிக நிறுவனங்களுக்குப் போட்டியாக அறிவித்திருக்கும் திட்டத்தைப் பற்றிப் பார்க்கலாம் எனச் சொல்லிஇருந்தேன். அந்தக் கட்டுரை எழுதப்பட்ட பின்னர், இன்னும் இரண்டு நிறுவனங்கள் இதே பாணியில் திட்டங்களை வெளியிட்டுள்ளன. டார்கெட், வால்மார்ட், பெஸ்ட் பை ஆகிய பிரபல நிறுவனங்கள்தான் இவை.
டார்கெட் என்ன செய்கிறது என்பதை முதலில் பார்க்கலாம்.
குறிப்பிட்ட சில பொருட்களை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடைக்குள் நுழைகிறீர்கள். தேவைப்பட்ட பொருளை (உதாரணத்துக்கு டி-ஷர்ட் என வைத்துக்கொள்ளலாம்) வாங்கி வரலாம். ஒருவேளை உங்களுக்குப் பிடித்த நிறம் கிடைக்கவில்லை என்றாலோ, அல்லது குறிப்பிட்ட டி-ஷர்ட் ஸ்டாக்கிலேயே இல்லை என்றாலோ, கவலை ஒன்றும் இல்லை. அது வைக்கப்பட்டு இருக்கும் இடத்தில் அந்தப் பொருளுக்கு உரிய QR குறியீடு கொடுக்கப்பட்டு இருக்கும். உங்களது ஸ்மார்ட்போனில் இருக்கும் அலைமென்பொருளைப் பயன்படுத்தி அந்தக் குறியீட்டை ஸ்கேன் செய்துகொண்டால் போதும்; உங்களது வீட்டுக்கு அதை அனுப்பிவைத்துவிடுவார்கள். உங்களது பெயர், முகவரி, கடன் அட்டை விவரங்களை ஒரு முறை மட்டும் பதிவுசெய்துகொண்டால் போதும். கடைக் குச் சென்று பொருட்களை வாங்கி சுமந்து வர சோம்பல்கொள்பவர்கள், கடைகளைக் குறுக்கும் நெடுக்குமாகச் சென்று அலைபேசிகளில் ஸ்கேன் செய்வதை டார்கெட் கடைகளில் விரைவில் பார்க்கலாம் என நினைக்கிறேன்.
டார்கெட் கடைகளில் மேற்கண்ட விதத்தில் நீங்கள் வாங்கும்போது, உங்களது பொருட்கள் அவர்களது ஆன்லைன் வணிகப் பிரிவில் இருந்து அனுப்பிவைக்கப்போவதாகச் சொல்கிறார்கள்.
வால்மார்ட் ஒரு படி மேலே சென்று விட்டது. கிட்டத்தட்ட டார்கெட் போலவேதான் நுகர்வு அனுபவம் இருக்கப்போகிறதாம். ஆனால், ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களை உங்கள் வீட்டுக்குக் கொண்டுவந்து டெலிவரி செய்யப்போவது, நீங்கள் ஆர்டர் செய்த அதே கடையாகவே இருக்கும் என்கிறது அவர்களது திட்டம். இதன் மூலம் வாடிக்கையாளர்களோடு மிக நெருங்கிய உறவை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்பது அவர்களது எண்ணம். இந்தியாவில் இருந்து மகள் பிரசவத்துக்காக கலிஃ«பார்னியா வருகை தரும் மடக்கிவிட்ட முழுக்கை சட்டை அணிந்த மாமா, சேலை அணிந்த மாமி தம்பதியினர் மாலை வேளையில் காலாற நடந்து வால்மார்ட் சென்று வெண்டைக்காய் ஆர்டர் செய்துவிட்டால், வாக்கிங் முடிந்து வீடு வருகையில் காய்கறி காத்திருக்கும்.
வெயிட்! கலிஃபோர்னியா என்ன... மத்திய அரசின் திட்டப்படி இன்னும் சில வருடங்களில் இந்தியாவில் இருக்கும் வால்மார்ட்களில் மேற்கண்டவை நடக்கச் சாத்தியக்கூறுகள் உண்டு.
கடைசியாக, பெஸ்ட் பை நிறுவனம். எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களை விற்கும் இந்த நிறுவனத்துக்குப் பெரும் பிரச்னை தங்களது கடைகளுக்கு வருகை தரும் பதின்ம வயது நுகர்வோர்கள். கடையில் இருக்கும் பொருட்களைப் பார்ப்பதோடு மட்டுமல்லாமல், அவற்றை அலைபேசி மூலம் புகைப்படம் எடுத்து, ஆன்லைன் வணிக வலைதளங்களில் விலை ஒப்பீடு செய்து அவற்றில் நேரடியாக வாங்கிக்கொள்ளும் பழக்கம் இருக்கிறது. கடைக்கு வரும் 40 சதவிகித நுகர்வோர்களே பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள் என்கிறது அவர்கள் திரட்டிய புள்ளிவிவரம். இதை எதிர்கொள்ள அவர்கள் இந்த வருட டிசம்பரில் ஆன்லைன் விலையை ஆதாரத்துடன் காட்டினால், அதே விலைக்குத் தாங்களும் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள்.
வருடக் கடைசியில் வரும் விடுமுறைகளின்போது நடக்கும் மிகப் பெரிய வணிகத்தை மனதில்கொண்டுதான் இந்த நிறுவனங்கள், பல்வேறு திட்டங்களை அறிவித்து ஆன்லைன் வணிகங்களுடன் போட்டியிட முயற்சி செய்கின்றன. இந்தத் திட்டங்கள் எல்லாம் பயனுள்ளதாக, லாபகரமானதாக இருந்ததா என்பது அடுத்த வருடத் தொடக்கத்தில் தெரிந்துவிடும்.
LOG OFF

Friday, October 12, 2012

கொடைக்கானல் நிழற்பட சிற்றுலா


கொடைக்கானல் :

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் , பல அறிய சிறப்புகளை பெற்றது .

பூவகைகளில் அறிதானதான குறிஞ்சிப்பூ இங்கு காணக்கிடைப்பது சிறப்பு .அதன் பெயராலேயே இங்குள்ள முருகர் கோயில் , குறிஞ்சி ஆண்டவர் கோயில் என்று அழைக்கப்படுகிறது .

ஏறத்தாழ 215 விதமான பறவை இனங்கள் காணப்படுகின்றன. இவற்றில் நான்கு பறவையினங்கள் அழயும் நிலையில் உள்ளன. 7 வகையான பறவை இனங்கள் உலகில் இங்கு மட்டுமே காணப்படுகின்றன.






படகு குழாம்  1

படகு குழாம்  2

படகு குழாம்  3

பிரயன்ட் பூங்கா:

கொடைக்கானல் ஏரியின்  அருகிலேயே உள்ளது பிரயன்ட் பூங்கா , கண்ணுக்கினிய பல வண்ண மலர்களும் , மரங்களும் இங்கு நிறைந்திருக்கின்றன .

பிரயன்ட் பூங்கா 1

பிரயன்ட் பூங்கா 2

பிரயன்ட் பூங்கா 3

பிரயன்ட் பூங்கா 4

பிரயன்ட் பூங்கா 5

பிரயன்ட் பூங்கா 6


கோகர்ஸ் வாக் :





லா சலேத் பேராலயம் :






கொடைக்கானல் ஏரி :



பைன் மரக்காடுகள் :




தொங்கும் பாறை :






டால்பின் மூக்கு :












மதிகெட்டான் சோலை :

                             






பேரிஜம் ஏரி :





தொப்பி தூக்கி பாறை :



மலர் மற்றும் காய்கறி கண்காட்சி :








Popular Posts