Find us on Google+ இணையத் தமிழன்: தன்னிலை விளக்கம்

Pages

Creative Commons License
இணையத் தமிழன் by Vijay Periasamy is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.
Showing posts with label தன்னிலை விளக்கம். Show all posts
Showing posts with label தன்னிலை விளக்கம். Show all posts

Thursday, January 20, 2011

நான் ஏன் பதிவு எழுத வேண்டும் - ஒரு தன்னிலை விளக்கம்


பதிவுகள் எனக்கு அறிமுகமாகி 3 வருடங்கள் ஆகிவிட்டது , ஆனால்
உருப்படியாக நான் எதையுமே எழுதியதில்லை .


நான் ஏன் எழுதவேண்டும் என்று எனக்கே பல நேரங்களில் தோன்றுவதுண்டு , ஆனாலும் மனசுக்குள்ளே எழுதவேண்டும் என்ற உந்துதலும் , ஆர்வமும் எனக்கு எப்பவுமே இருந்துவருகின்றது . அந்த ஆர்வத்தால ( ஆர்வக்கோளாறு ? ) அப்பப்போ பதிவுகள் எழுதரதுண்டு .

சமீபத்தில் , அறை நண்பர் எனது   "வாழ்க நற்றமிழ் !!! வாழிய செந்தமிழ் நாடு !!! ", என்ற பதிவை படிச்சிட்டு , பத்திரிகையில வர்ற செய்தியெல்லாம் படிச்சிட்டு அதிலிருந்து வாக்கியங்களா எடுத்து போட்டு , பதிவா எழுதீட்டீங்களா ? என்று விளையாட்டாக கேட்டார். 

அந்த நிமிசமே மனசுக்குள்ள , நான் ஏன் பதிவு எழுத வந்தேன் என்ற கேள்விக்கு பதில் கிடைத்தது . யாரையும் impress பண்ணவோ , பிரபல பதிவர் ஆகவேண்டும் என்றோ நான் எழுதவில்லை .

என் மனசுக்குள் எழும் ஆதங்களுக்கும் , கேள்விகளுக்கும் வடிகாலாகவும் ..
சமுதாயத்தில் , அரசியலில் மக்களுக்கு எதிராக எதாவது தீங்கு நடக்கும் போது , அதை நேரடியா எதிர்க்க திராணி இல்லா விட்டாலும் , என்னோட எதிர்ப்பையும் , கருத்துகளையும் அழுத்தமா வெளிப்படுத்த , என்னுடைய பதிவுகள் என்னோட நிலைக்கண்ணாடியா இருக்கு .

அதுவுமில்லாம , பள்ளியில் படிக்கும் போது , தமிழ்ல்ல எழுதி பழகினது , அதற்க்கப்புறம் பல வருடங்களாக , என் தமிழுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லாதிருந்தது .
தமிழுக்கும் எனக்குமான தொடர்பாகவே , என் பதிவுகள் இருப்பதால் எனக்கு மிக்க மகிழ்ச்சியே ..

மற்றபடி , விமர்சனங்கள் அனைத்தும் வரவேற்க்கபடுகின்றன . எதிர்மறை கருத்துகளும் என்னை நெறிப்படுத்தவே உதவும் என்பதால் .....,

போற்றுவார் போற்றட்டும் , தூற்றுவார் தூற்றட்டும் !!!   

Popular Posts