Find us on Google+ இணையத் தமிழன்: May 2012

Pages

Creative Commons License
இணையத் தமிழன் by Vijay Periasamy is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.

Saturday, May 26, 2012

வேளாங்கண்ணி நடைபயணம்


வேளாங்கண்ணி , மேரி மாதாவின் திருத்தலம்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர்.
ஒவ்வொரு வருடமும் ,ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம்,ஆரோக்ய மாதா திருவிழாவின் போது, திருச்செங்கோடு பங்கு ஆலயத்திலிருந்து பக்தர்கள் நடைபயணமாக வேளாங்கண்ணிக்கு சென்று வருவது வழக்கம்.
நான் சிறுவனாக இருக்கும் போதிலிருந்து ஒருமுறையேனும் நடைபயணம் போக வேண்டும் என்று மிகுந்த ஆசை.
ஆனால் அதுகைகூட பல வருடங்கள் நான் காத்திருக்க வேண்டிஇருந்தது.

டந்த 2008 ஆம் ஆண்டு ,வேளாங்கண்ணி நடைபயணம் செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
எங்கள் நடைபயணக் குழுவில் எனக்கு யாரையும் அறிமுகம் கிடையாது.
இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயதினரும்
குழுவில் இருந்தார்கள்.
ஆரோக்யமாதாவின் அருளோடு மிகுந்த உற்சாகத்துடன்
தொடங்கியது எங்கள் பயணம்.

மொத்தம் 9 நாட்கள் பயணத் திட்டம்.
ஒவ்வொரு நாளும் 35 முதல் 40 கிலோ மீட்டர் பயணிப்பதாகவும்,
நாளின் முடிவில் அந்தந்த ஊரில் இருக்கும் பங்கு ஆலயத்தில் தங்குவதாகவும் முடிவானது.
திருச்செங்கோடு -வேளாங்கண்ணி மொத்த பயண தூரம்
சுமார் 270 கிலோமீட்டர்.

நாள் 1:
பயணம் மேற்கொண்ட வழிகள்:
திருச்செங்கோடு
குமாரமங்கலம்
வேலகவுண்டம்பட்டி
நாமக்கல்
பயண தூரம் : சுமார் 37 கிலோ மீட்டர்.

பசுமை காவலர்கள்
                     
யணம் ஆரம்பிக்கும் போது எந்த வித எதிர்ப்பார்ப்பும் என்னிடம் இல்லை.
அனால்முதல் நாளின்முடிவிலேயே எனக்கு தெரிந்து விட்டது,
என் வாழ்க்கையில் நான் அறிந்திராத பல ஆச்சர்யங்களையும்,
அனுபவங்களையும் எனக்கு கற்றுத் தரும் பயணமிது என்று.

நாள் 2:
பயணம் மேற்கொண்ட வழிகள்:
நாமக்கல்
நல்லூர்
வளையப்பட்டி
ஏளூர்பட்டி
தொட்டியம்
பயண தூரம் : சுமார் 32 கிலோ மீட்டர்.

தொட்டியம் அருகே 1
               

தொட்டியம் அருகே 2
                       
ண்மையிலேயே என் வாழ்வில் இப்படி ஒரு பயணத்தை நான் அனுபவித்ததில்லை.
செல்போன் தொல்லை இல்லை ,வெளி உலகத் தொடர்புகளில்லை.. இயற்கையும் நானும் மட்டும்.
இயற்கையோடு இணைந்த வாழ்வு எவ்வளவு
மகிழ்ச்சியாகவும், இயல்பானதாகவும் இருக்கின்றது.


நாள் 3:
பயணம் மேற்கொண்ட வழிகள்:
தொட்டியம்
மணமேடு
முசிறி
குணசீலம்
நொச்சியம் - திருச்சி - டோல்கேட்
பயண தூரம் : சுமார் 48 கிலோ மீட்டர்.

மணமேடு 
                     

                               

பயணக்களைப்பில் நான்

ங்கள் பயணக் குழுவில்,நண்பர்களை அமைத்துக் கொண்டேன்.
ஒரு சிறுவனைப் போல் என் உள்ளம் குதூகலமாய் இருக்கின்றது.
எவ்வளவு நடந்தும் கால் வலிக்கவேயில்லை,
சோர்வு இருந்தும் அது உள்ளத்தின் மகிழ்ச்சியை குறைக்கவில்லை.

நாள் 4:                         
திருச்சி - டோல்கேட்
கல்லணை
நேமம்
திருக்காட்டுப்பள்ளி
பூண்டி
பயண தூரம் : சுமார் 25 கிலோ மீட்டர்.


நொச்சியம் அருகே பச்சை போர்வை வயல்வெளி
                         

தமிழனின் பெருமை - கரிகாற்பெருவளத்தானின் கல்லணை
                         
செல்லும் வழி எங்கும் பச்சை போர்வை போன்ற வயல்வெளிகள்,
இன்னும் சக மனிதர்களை மதிக்கும் கிராம மனிதர்கள்,
வெள்ளந்தியாய் மனதைகொள்ளை கொள்ளும் சிறுவர் சிறுமியர்,
50 பைசாவுக்கு இட்லியும்,1 ரூபாய்க்கு தோசையும் விற்கும் கண் தெரியாத மூதாட்டி,
என்று பலவித மனிதர்களை , எனக்கு அறிமுகப்படுத்தியது இந்த பயணம்.


நாள் 5:
பூண்டியில் ஓய்வு

பூலோகம் போற்றும் பூண்டி புதுமை மாதா பேராலயம் !

காவிரி ஆற்றங்கரையோரம் ,தஞ்சை மாவட்டம் , திருவையாறு தாலுகாவில் அமைந்துள்ள சின்னஞ்சிறு கிராமம் பூண்டி
இங்கு கி.பி 1714 - 1718 ஆம ஆண்டுகளில் இந்த கோயில்அமைக்கப்பட்டது.
இத்தாலிய பாதிரியாரான அருட் திரு கான்ஸ்டன்டின் ஜோசப் அவர்களால் அமைக்கப்பட்டது இந்த கோயில்.
அவர் வேறு யாருமல்ல , தமிழின் மேல் கொண்ட காதலால் தன்
பெயரை "வீரமாமுனிவர்" என மாற்றிக் கொண்டு,

தொன்னூல் விளக்கம்,
கொடுந்தமிழ் இலக்கணம்,
தேம்பாவணி

போன்ற சிறந்த நூல்களை இயற்றி தமிழுக்கு தொண்டாற்றியவர்.

பூண்டி மாதா திருத்தலம் 1
ந்தியாவில் அமலோற்பவ அன்னைக்காக (Our  Lady of  Immaculate Conception ) அமைக்கப்பட்ட மிகச்சிறந்த ஆலயங்களில் இதுவும் ஒன்று.
இங்கு இயேசு கிறிஸ்து அறைந்து கொல்லப்பட்ட திருச்சிலுவையின்
சிறு பகுதி பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.

பூண்டி மாதா திருத்தலம் 2
                                     
நாள் 6:
பயணம் மேற்கொண்ட வழிகள்:
பூண்டி
திருவையாறு
திருப்பழனம்
ஈச்சங்குடி
பயண தூரம் : சுமார் 31 கிலோ மீட்டர்.

                               


திருவையாறு கோவில்
                     

                   
நாள் 7:
பயணம் மேற்கொண்ட வழிகள்:
ஈச்சங்குடி
கபிஸ்தலம்
பாபநாசம்
வலங்கைமான்
மஞ்சக்குடி
செம்மங்குடி
பயண தூரம் : சுமார் 47 கிலோ மீட்டர்.


கபிஸ்தலம் அருகே - நவக்ரஹ ஸ்தல வரைபடம்


நாள் 8:
பயணம் மேற்கொண்ட வழிகள்:
செம்மங்குடி
பவித்திரமாணிக்கம்
திருவாரூர்
புலிவலம்
சிக்கல்
நாகப்பட்டினம்
பயண தூரம் : சுமார் 42 கிலோ மீட்டர்.



வனத்து அந்தோணியார் ஆலயம், பவித்திரமாணிக்கம்


திருவாரூர் கோபுர தரிசனம்
                                 

திருவாரூர் கோயில் குளம்
                         
நாள் 9:
பயணம் மேற்கொண்ட வழிகள்:
நாகப்பட்டினம்
பரவை
வேளாங்கண்ணி
பயண தூரம் : சுமார் 12 கிலோ மீட்டர்.

ழி நெடுக மாதாவின் பாடல்களை பாடிக்கொண்டும்,
ஜெபித்துக்கொண்டும் சென்றோம்.

நாகை - வேளாங்கண்ணி செல்லும் வழியில்

சுனாமி நினைவகம்

வேளாங்கண்ணி மாதா வரவேற்கிறார்

வேளாங்கண்ணி ஆரோக்ய மாதா பேராலயம் :

தூய ஆரோக்ய அன்னைதிருத்தலம் , "கிழக்கின் லூர்து (நகர்)"என்னும்
சிறப்பு பெயர் கொண்டது.
குழந்தை ஏசுவை கையில்ஏந்தியவாறு , அந்தணச்சிறுவனுக்கு மாதா காட்சி அளித்ததாக வரலாறுண்டு.
கடற் புயலில் மாட்டிக்கொண்டு தடுமாறிய போர்த்துக்கீசியர்கள் , மாதாவிடம் வேண்டி தப்பித்து வந்ததாகவும், அந்த நன்றியின் பொருட்டுஇங்குஆலயம் எழுப்பியதாகவும் கூறுவர்.
அனைத்து மதத்தைசேர்ந்த மக்களும்இங்கு வந்து மாதாவை வணங்கி செல்வதை பார்க்கும்போது மனது மகிழ்ச்சியாக இருக்கும்.

னைத்து மதங்களும் வலியுறுத்துவது "அன்பு" மட்டும் தானே !.



வேளாங்கண்ணி மாதா திருத்தலம்

ள்ள அள்ளக் குறையாத அன்பையும்,
வாழ்கையின் மீது நம்பிக்கையும்,
இயற்கையின் மீது காதலும் மேலிட,
மனமேயில்லாமல்முடித்துவிட்டோம் எங்கள் பயணத்தை.

யந்திர கதியான இந்த வாழ்க்கையில், இனி எப்போது இது போன்றதொரு பயணம் அமையுமோ தெரியாது.

து வரை காத்திருத்தலுடன் ....

Friday, May 18, 2012

தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை


வாசிப்பு பழக்கம் எனக்கு ஏற்பட்டதற்கு, என் அம்மாவிற்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அலுவலகத்திலிருந்து வரும் போது அவர்கள் வாங்கி வரும் வாரஇதழ்களின் பொம்மைகளை பார்க்க , பக்கங்களை திருப்ப ஆரம்பித்ததில் தொடங்கியது என் வாசிப்பு அனுபவம்.

வெள்ளிக்கிழமைக்காக காத்திருந்து நான் படித்த சிறுவர்மலர், என்னுள் புதிய உலகத்தை படைக்கத்தொடங்கியது. அதில் வரும் நீதிக் கதைகளும், படக்கதைகளும் எனக்கு ஆச்சர்யத்தை தந்தன.

காமிக்ஸ்:

சித்தி வீட்டில் தான் முதன் முதலில் காமிக்ஸ் புத்தகங்கள் அறிமுகமாயின
ஜேம்ஸ்பாண்ட்
இரும்புக்கை மாயாவி
முகமூடி வீரர் மாயாவி
ஆர்ச்சி இயந்திர மனிதன்.


ஆகிய காமிக்ஸ் கதாபாத்திரங்களை, முத்து காமிக்ஸ், ராணி காமிக்ஸ் என வகை தொகை இல்லாமல் மணிக்கணக்கில் படித்து ரசித்தேன்.பள்ளி நூலகத்தில் எனக்கு அறிமுகமானது அம்புலிமாமா கதைகள். விக்கிரமாதித்தன்,தெனாலிராமன் ஆகியோரின் வீர,தீர சாகசங்களை நான் அதில் தான் படித்து தெரிந்து கொண்டேன்.நான் முதன் முதலில் படித்த பெரிய புத்தகம், என் தாத்தா எனக்கு தந்த மகாபாரதம். மிகுந்த ஆர்வத்துடன் , பிரமிப்பையும் தந்தது மகாபாரதம். அதில் பீஷ்மர் என் ஆஸ்தான ஹீரோ. மகாபாரதத்தை தொடர்ந்து ராமாயணத்தையும் படித்து முடித்தேன்.


கிரைம் நாவல்கள்:

பின்னர் எனது ஆர்வம , கிரைம் மற்றும் சஸ்பென்ஸ் நாவல்களை நோக்கி திரும்பிற்று. கிரைம் நாவல் மன்னன ராஜேஷ்குமார் அவர்களின் நாவல்களை மிகவும் விரும்பி படிப்பேன்.பின்னர்
பட்டுக்கோட்டை பிரபாகர்,
இந்திரா பார்த்தசாரதி,
சுபா
ஆகியோரது திகில் நாவல்களை ரசித்து படித்தேன்.


வ்வாறு வெறும் கிரைம் ,திகில் நாவல்களையே படித்து கொண்டிருந்த நான், படித்த முதல் காதல் நாவல்,இந்துமதி அவர்களின் கீதமடி நான் உனக்கு . அதோடு விடாமல் ரமணி சந்திரன் அவர்களின் நாவல்கள் பலவற்றை படிக்க தொடங்கினேன்.


வாரஇதழ்கள்:

டிப்படியாக வார இதழ்கள் பெரும்பாலானவற்றின் வாசகனானேன்.
ஆனந்தவிகடன்
குமுதம்
கோகுலம்
கல்கி
கல்கண்டு
பாக்யா
என அனைத்து பிரபல இதழ்களையும் வாசித்துவிடுவேன்.ஆனந்த விகடன் என்னுள் சிறுக சிறுக பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. 
ஹாய் மதன்,
வந்தார்கள் வென்றார்கள் 
ஆகிய மதனின் தொடர்கள் எனக்கு மிகவும் பிடித்துப் போனது.

சுஜாதா:

சுஜாதா அவர்களை நான் தெரிந்து கொண்டது விகடன் மூலமாகத்தான்.
அவரின் எழுத்து நடை எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஏன்? எதற்கு? எப்படி?
மீண்டும் ஜீனோ
ஸ்ரீரங்கத்து தேவதைகள்
கற்றதும் பெற்றதும் 


போன்ற அவரின் படைப்புக்கள் என்னை அவரின் பரம விசிறி ஆக்கிவிட்டது

வரலாற்று நாவல்கள் :

ரலாற்று நாவல்களை நான் விரும்பி படிக்க காரணம் சாண்டில்யன் அவர்களின் நாவல்களே.அவர் நாவல்கள் , ஒரு திரைப்படம் பார்ப்பதை போன்ற ஆர்வத்தையும் உற்சாகத்தையும் எனக்கு தந்தன. அவற்றுள் சில
கடல் புறா
யவன ராணி
மலையரசி
ஜலதீபம்
ரானா ஹமீர்


கவிதை நூல்கள்:

வைரமுத்து அவர்களின் தண்ணீர் தேசம் நான் வியந்த கவிதை/கதை நூல்.
அவரின் கள்ளிக்காட்டு இதிகாசமும், தற்போதைய மூன்றாம் உலகப் போரும் கூட எந்தன் விருப்பங்கள்.பார்த்திபன் எழுதிய "கிறுக்கல்கள்" கவிதை நூல் எனக்கு பிடித்தமானது.


பொன்னியின் செல்வன்:

சில வருடங்களாக , தமிழ் நூல்கள்,நாவல்கள் வாசிப்பது மிகவும் குறைந்து விட்டது, மீண்டும் நான் தமிழ் நாவல்கள் பக்கம் திரும்ப காரணமாயிருந்தது
கல்கியின் பொன்னியின் செல்வன்.நான் படித்த அனைத்து ஆங்கில நாவல்களையும் தூக்கி சாப்பிடாது போல இருந்தது பொன்னியின் செல்வன். கல்கி அவர்களின் படைப்புகள் மேல் பன்மடங்கு மதிப்பு உண்டாயின. பொன்னியின் செல்வன் படித்து பல நாட்கள் வந்தியத் தேவனோடும், ஆழ்வார்க்கடியான் நம்பியோடும், ஆதித்த கரிகாலனோடும் குதிரையில் செல்வது போன்ற பிரமை என்னை விட்டு அகலவில்லை. பொன்னியின் செல்வன் என்னை அந்த அளவிற்கு கட்டிப்போட்டது.பின்னர் அவரின் சிவகாமியின் சபதத்தையும், பார்த்திபன் கனவையும் படித்து சுவைத்தேன்.




குறிப்பு:
ற்போது நான் படித்துக் கொண்டிருப்பது , தமிழின் முதல் நாவலான மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள் எழுதிய பிரதாப முதலியார் சரித்தரம் .

நண்பர்களே, நீங்கள் படித்து ரசித்த வேறு சில நாவல்களை , எழுத்தாளர்களை எனக்கும் சொல்லுங்கள் , படித்து மகிழ்வேன் , நன்றி .

Friday, May 11, 2012

நான் ரசித்து படித்த ஆங்கில நூல்கள்/நாவல்கள்


ங்கில நாவல்களுடனான என்னுடைய அறிமுகம் பள்ளியிளிருந்தே ஆரம்பித்துவிட்டது. என்னதான் ஆங்கிலம் எனக்கு திண்டாட்டம் என்றாலும் ,ஆங்கிலம் இரண்டாம் தாளில் வரும் Non-Detail எனப்படும் கதை / கட்டுரைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதன் பின்னர் பல ஆங்கில நாவல்களை படிக்கத் தொடங்கினேன். நான் மிகவும் ரசித்த சில நாவல்களை இங்கு வரிசைப் படுத்துகின்றேன்.

ஆலிவர் ட்விஸ்ட் (OliverTwist)  : 

நான் படித்து பிரமித்த முதல் ஆங்கில நாவல் , சார்லஸ் டிக்கன்ஸ் (Charles Dickens) அவர்கள் எழுதிய "ஆலிவர் ட்விஸ்ட்" எனும் புகழ்பெற்ற நாவலாகும். இந்நாவல் பின்னர் ஹாலிவுட் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு,பல ஆஸ்கர் விருதுகளை பெற்றது.தமிழில் கூட "அநாதை ஆனந்தன் " என்ற திரைப்படம் , இந்த நாவலை தழுவி படமாக்கப்பட்டது தான்.
அனாதையான ஆலிவர் எனும் சிறுவன் , கொள்ளையர் கூட்டத்தில் சிக்கிக் கொண்டு, பற்பல போராட்டங்களுக்கு பிறகு நல்லவர்கள் கையில் சேரும் கதை. மிக உருக்கமாகவும், சுவாரசியமாகவும் பின்னப்பட்ட அருமையான நாவல் இது.

ஷெர்லாக் ஹோல்ம்ஸ் (Sherlock Holmes):

எழுத்தாளரும், இயற்பியலருமான சர். ஆர்தர் கொனன் டொயல்(Sir Arthur Conan Doyle) அவர்களால் உருவாக்கப் பட்ட துப்பறியும் கற்பனை பாத்திரமே "ஷெர்லாக் ஹோல்ம்ஸ்"."ஷெர்லாக் ஹோல்ம்ஸ்" ஐ வைத்து 4 நாவல்களையும், 56 சிறுகதைகளையும் எழுதியுள்ளார் இதன் ஆசிரியர். என் சிறுவயது ஆக்க்ஷன் ஹீரோஇவர்தான்.

ஷேக்ஸ்பியரின் Twelfth Night:

உலகப்புகழ் பெற்ற ஆங்கில இலக்கிய மேதை, வில்லியம் ஷேக்ஸ்பியர் அவர்கள் எழுதிய "ரொமாண்டிக் காமெடி" கதையே Twelfth Night ஆகும்.
நாயகி வயோலா தன் இரட்டை சகோதரன் செபஸ்டியன் போல வேடமிடுகிறார், அவர் மேல் ஒலிவியா காதல கொள்ள நடைபெறும் குழப்பங்களின் கடைசியில் நாயகன் செபஸ்டியன் வந்து சுபமாக முடியும் நகைச்சுவை காதல் கதை.இதன் கதாபாத்திரங்கள் செபஸ்டியன், வயோலா, ஒலிவியா ஆகியோரின் பாத்திரப்படைப்பு மிகுந்த சுவாரசியமாக இருக்கும்.

தி ஸ்கார்லெட் பிம்பெர்னல் (The Scarlett Pimpernal):

பிரிட்டன் நாவலாசிரியை "பரோனஸ் ஆர்சி", அவர்கள் உருவாக்கிய வீர சாகச
நாவல் இது. பிரெஞ்சுப் புரட்சியின் பின்னணியில்நடைபெறும் இந்த கதையின் நாயகன் , பெர்சி ப்ளாக்னி எனும் கோமாளி செல்வந்தனாகவும், பிரெஞ்சுப் பிரபுக்களையும் அவர்தம் குடும்பத்தினரையும் புரட்சிகாரர்களிடம் இருந்து காப்பாற்றும் ஸ்கார்லெட் பிம்பெர்னலாகவும் என்னை மிகவும் கவர்ந்தார். இங்கிலாந்தின் மிகச்சிறந்த அரங்கேற்ற நாடகங்களில் , இதுவும் ஒன்றாகும்.


சிட்னி ஷெல்டன் நாவல்கள்:

இவ்வாறாக வெறும் பாட புத்தக ஆங்கில நூல்களையே இதுவரை வாசித்து ரசித்திருந்த எனக்கு, மிக நீண்ட வருடங்களுக்கு பின் அறிமுகமான முதல் ஆங்கில நாவல், சிட்னி ஷெல்டன் அவர்களின் நாவல்களே,இவர் உலகப் புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளர், ஆஸ்கார் விருது பெற்றவர்.த்ரில்லர் நாவல் உலகின் முடிசூடா மன்னனவார்.

எதேச்சையாக இவரின் நாவல் ஒன்று எனக்கு கிடைத்தது, நாவலின் தலைப்பு "Are You Afraid of the Dark", சரி எப்படி தான் இருக்குமோ பார்ப்போம் என்ற நினைப்பில் படிக்க ஆரம்பித்த நான், இரவு 8 மணியில் இருந்து அதிகாலை 5 மணிக்கு 300 சொச்சம் பக்கங்களையுடைய அந்த நாவலை தொடர்ச்சியாக படித்து முடித்திருந்தேன். (உணவு , தூக்கம் இன்றி ).முற்றிலும் புதிய , படிக்கும் சுவாரசியத்தையும், வாசிப்பு அனுபவத்தையும் தந்தது அந்த நாவல். 

அதன் பிறகு , சிட்னி ஷெல்டன் நாவல்களை தேடி தேடி வாங்கிப் படித்தேன்.ஒவ்வொரு முறை அவரின் நாவல்களை படிக்கும் போதும் , அந்த கதை மாந்தர்களுடனும் , கதை சூழலுடனும் ஒன்றிப் போய், அதை விட்டு வெளியில் வர குறைந்த பட்சம் 2 நாட்களாவது எனக்கு தேவைப்பட்டது. அந்த அளவிற்கு என்னை ஈர்த்தது அவரின் நாவல்கள். கிட்டத்தட்ட அவரின் அனைத்து நாவல்களையும் படித்து முடித்துவிட்டேன். துரதிஷ்டவசமாக அவரின் 18 புத்தகங்களை , ஒரு பேருந்தில் தொலைத்துவிட்டேன். இன்னும் எனக்கு வருத்தமான விஷயம் அது. அதன் பின்னர் அவரின் அனைத்து நாவல்களும் மின்-நூல்களாக எனக்கு கிடைத்த பின்பு தான் எனக்கு ஆறுதலே கிடைத்தது.

எனக்கு மிகவும் பிடித்த அவரின் நாவல்கள் சில


டான் பிரவுன் (Dan Brown) நாவல்கள் :

"தி டாவின்சி கோட்" எனும் சர்ச்சைக்குரிய நாவலின் மூலம் உலகப் புகழ் பெற்றவர் டேன் பிரவுன்.இவர் எழுதிய 5 நாவல்களும் சிறந்த த்ரில்லர் கதைகளாகும். 

சேட்டன் பகத் நாவல்கள்:

இவ்வாறு சிட்னி ஷெல்டன் , டேன் பிரவுன் என வேறு நாட்டு நாவலாசிரியர்களின் படைப்புகள் மட்டுமே எனக்கு தெரிந்திருந்த நிலையில் , நண்பர்ஒருவர் அறையில் கிடைத்த இந்திய நாவலாசிரியர் ஒருவரின் புத்தகம் என்னை மிகவும் ஈர்த்தது. அவர் "சேட்டன் பகத்", அந்த நாவலின் பெயர் "One Night @ the Call Center". மிக வித்தியாசமான கதைக் களத்தில் , இந்தியப் பின்னணியில் அமைந்திருந்த அந்த கதை எனக்கு உடனடியாகபிடித்துபோனது. பின்னர் அவர் நாவல்களை தேடி படித்தேன்.


இந்த நாவல்கள் அனைத்தும் இளம்தலைமுறையினர் ரசிக்கும் விதமாக இருந்தது. இவரின் "Five Point Someone" நாவல் "3Idiots" திரைப்படமாக வந்து அனைவரின் பாராட்டையும் வசூல் சாதனையையும் படைத்தது உங்கள் அனைவருக்கும் தெரியும். அமெரிக்காவின் "The NewYork Times" இந்திய வரலாற்றில் அதிகம் விற்பனையாகும் நாவல்கள், இவருடயதே என்று கூறுகிறது. இவரின் சமீபத்திய படைப்பான "Revolution 2020: Love,Corruption,Ambition" எனும் நூலை மட்டும் இன்னும் வாசிக்கவில்லை.




நண்பர்களே,வரும்காலத்தில் இன்னும் நிறைய இந்திய, வேற்று நாட்டு நாவலாசிரியர்களின் படைப்புகளை படிக்க வேண்டும் என்று மிகுந்த ஆவாலாக உள்ளது. நீங்கள் ரசித்த நாவல்/நாவலாசிரியர் பெயர்களை என்னுடன் பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன். நன்றி.















Popular Posts