Find us on Google+ இணையத் தமிழன்: August 2015

Pages

Creative Commons License
இணையத் தமிழன் by Vijay Periasamy is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.

Saturday, August 1, 2015

A.P.J. அப்துல் கலாம் : கண்ணீர் அஞ்சலி

வாழ்ந்தவர் கோடி 

                          மறைந்தவர்  கோடி 
                        
                                           மக்களின் மனதில் நீங்காது நிலைதிருப்பவர் நீரே !!!


https://www.flickr.com/photos/pushkarv/5148146554
Photo Credits to Pushkar V , from Flickr: https://www.flickr.com/photos/pushkarv/5148146554

இந்தியாவின் தென்கோடி ராமேஸ்வரத்தில் உதித்த ஏவுகணை ஒன்று 
தேசமெங்கும் தனது புகழ் பரப்பி ஷில்லாங்கில் மறைந்தது.


உனைப்பெற்று பேருவகை கொண்டாள் தமிழன்னை, இன்று 
உன்னை இழந்து பாரத மாதா, பெருந்துயரம் கொண்டாள். 


எளிமையாய் பிறந்தாய் ,
எளிமையாய் வாழ்ந்தாய் ,
எளிமையாய் எமை விட்டு பிரிந்து சென்றாய் .
எளிமைக்கு இலக்கணம் வகுத்தாய் .


எங்களை கனவு காணச்சொன்ன நீங்கள் 
இப்போது எங்களை கண்ணீரில் விட்டுச் சென்றீர்.


மனிதனாய் பிறந்தாய் 
                          முதல் குடிமகனாய் உயர்ந்தாய் 
                                                       மாமனிதராய் வாழ்ந்தாய் 
                                                                         இன்று புனிதராய் மரித்தீரே!!!


நீ எங்களை விட்டுச் சென்றுவிட்டாய் . ஆம் !!! ,
வளமான , வலிமையான , அமைதியான பாரதத்தை 
உண்டாக்கும் பொறுப்பை , இன்றைய தலைமுறையினரிடம் 
விட்டுச் சென்றுள்ளாய் .


அப்துல் கலாம் ஐயா , உங்களை ஒருமுறை பார்க்க,
வாய்ப்பு அளித்ததோடு மட்டும் அல்லாமல் 
எனக்கு ஆசானாக , எங்கள் கல்லூரியில் நீங்கள் எடுத்த 
வகுப்பில் இடம்பெற வாய்ப்பளித்த இறைவனுக்கு கோடானு கோடி நன்றி .


நீங்கள் மண்ணில் புதைக்கப்படவில்லை 
இந்திய இளைஞர்கள் நெஞ்சில் விதைக்கப்பட்டு இருக்கிறீர்கள் !!!

Popular Posts